இலங்கைக்கு எதிரான போட்டி... தொடரை கைப்பற்றியது இந்திய அணி...

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 2க்கு பூஜ்ஜியம்  கைப்பற்றியது. 

இலங்கைக்கு எதிரான போட்டி... தொடரை கைப்பற்றியது இந்திய அணி...
இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா 65 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் சஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
 
இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கடத்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா 13 ரன்களிலும், இஷான் கிஷன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து ஷிகர் தவான் 29 ரன்னிலும், மணீஷ் பாண்டே 37 ரன்னிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். சற்று பொறுப்புடன் ஆடிய  சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் சேர்ந்து வெளியேறினார்.  
 
இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என்று சூழல் உருவாகியது. பின்னர் குருணால் பாண்ட்யா மற்றும் தீபக் சாஹர் நிதானமாக ரன்கள் சேர்க்க தொடங்கினர். குருணால் பாண்ட்யா 35 ரன்னில் பெவிலியன் திரும்ப சாஹர் புவனேஷ்வர் குமாருடன் சேர்ந்து வெற்றிக்கு வழிவகை செய்தார். சிறப்பாக ஆடிய தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.