செல்ஃபி எடுக்க வந்த ஊழியரை அவமதித்த ருத்துராஜ்.. வைரலாகும் வீடியோ!!

செல்ஃபி எடுக்க வந்த ஊழியரை அவமதித்த ருத்துராஜ்.. வைரலாகும் வீடியோ!!

செல்ஃபி எடுக்க வந்த மைதான ஊழியரை, கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காட்சி, இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பெங்களூருவில், இந்தியா - தென்னாப்பிரிக்காவிற்கு இடையே நடைபெற்ற 5வது டி20 போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, மைதானத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் காத்திருந்தபோது, ஊழியர் ஒருவர், அவர் அருகே அமர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். இதை சற்றும் விரும்பாத ருத்துராஜ், ஊழியரை விலகிச்செல்லுமாறு சைகை காட்டினார். ருத்துராஜின் செயலிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.