வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  இந்நிலையில் நேற்று 3வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.  இதன்மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் புஜாராவும் 61 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்திக்கொள்ளப்பட்டது. 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 22 ரன்களிலும் ஜடேஜா 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.  இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.