டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டோக்கியோவில் நடக்கவிருக்கும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில்,இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்களை கொண்ட அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது கேப்டன் யார்? என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில்,தற்போது ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன்களை ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்திருக்கிறது.அந்த வகையில், இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து,ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,அவர் ’பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன்’.

மேலும், தனது விளையாட்டு மூலம் மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக அவர்கள் அளிக்கும் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது என்றும்,இன்னும் சில வாரங்களில்,நடக்கவிருக்கும் டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு தேர்வாகியிருக்கும் நமது இந்திய குழுவினருக்கு வாழ்த்துகள் என்று வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.