கடும் காய்ச்சல் காரணமாக தங்கமகன் நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த தங்கமகன் நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காய்ச்சல் காரணமாக தங்கமகன் நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி...

டோக்கியோவில் இருந்து இருந்து தாயகம் திரும்பிய இவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலில் மற்றும் தொண்டை வறட்சியினால் அவதிப்பட்டு வருகிறார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் குறையாததால், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால், அவர் நாளை நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது கடினம் என நீரஜ் சோப்ராவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.