ராஜஸ்தானை 90 ரன்களுக்குள் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்... பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்க வைத்தது...

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பிளே-ஆப் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ராஜஸ்தானை 90 ரன்களுக்குள் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்... பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்க வைத்தது...

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இவின் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

இதில் 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தநிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. அணியில் அதிகபட்சமாக இவின் லீவிஸ் மட்டுமே 24 ரன்கள் அடித்திருந்தார். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, க்ளென் பிலிப்ஸ் என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அணியின் ரன் ரேட் கணிசமாக குறைந்தது.  டேவிட் மில்லர் 15 ரன்களில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். ராகுல் திவாட்டியா 12 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  இறுதியாக 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. மும்பை அணி 8 புள்ளி 2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.  இதனால் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இஷான் கிஷான் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

சூர்யகுமார் 13 ரன்களில் வெளியேறினார்.  ஹர்திக் பாண்ட்யா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆப் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.