இனி இந்த அணிக்காக விளையாடமாட்டார் மெஸ்ஸி!  

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, இனி பார்சிலோனா அணிக்காக  விளையாட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.

இனி இந்த அணிக்காக விளையாடமாட்டார் மெஸ்ஸி!   

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, இனி பார்சிலோனா அணிக்காக  விளையாட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.

எஃப்.சி. பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்கும், லியோனல் மெஸ்ஸிக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், வீரர்கள் பதிவுக்கான ஸ்பானிஷ் லிகா விதிமுறைகளின்படி, புதிய ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட முடியவில்லை. இதற்கு நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்சிலோனா அணி, தமது அணியில் மெஸ்ஸி தொடர மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தாய்நாடான அர்ஜென்டினாவிற்காக விளையாடி வரும் மெஸ்ஸி, இனிமேல் எந்த கால்பந்து கிளப்பில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.