பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன் பிரதமருடன் உரையாடிய தமிழக வீரர் மாரியப்பன் உறுதி

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன் பிரதமருடன் உரையாடிய தமிழக வீரர் மாரியப்பன் உறுதி

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதி துவங்கி, செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணிக்கு கேப்டனாக முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய பாராலிம்பிக் அணியில் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா உட்பட 54 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தேவேந்திர ஜஜாரியா 2004 மற்றும் 2016 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இதில் தமிழக வீரரும், இந்திய பாராலிம்பிக் அணி தலைவருமான  மாரியப்பன் தங்கவேலு உடன் பிரதமர் கலந்துரையாடினார்.