முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓய்வு ?..குழப்பத்தில் ரசிகர்கள்...!!

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓய்வு ?..குழப்பத்தில் ரசிகர்கள்...!!

இந்திய அணி வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு நடக்கவுள்ள  3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதுவுள்ளதால் ரசிகர்களின் முழு மூச்சாக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் போடியிலிருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் வெளியானதையடுத்து, ரசிகர்களிடையே இது குறித்த காரணங்கள் பற்றிய பரபரப்பு நிலவிவருகிறது.

இதற்கிடையில், ஓமிக்ரான் என்ற புதியவகை கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய் கொண்டே இருந்த வீரர்கள் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால், இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நட்சத்திர ஆட்ட காரர்  ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. 

 நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா அணியில் இடம்பெறாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது .  சிறிய காயம் தான் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில் காயத்தின் தன்மை மிகப்பெரிதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்டிருக்கும் பலத்த காயத்திற்கு   ஜடேஜா அறுவை சிகிச்சை செய்யயுள்ளதால், அவரால் சுமார் 7 மாதம் வரை கிரிக்கெட் விளையாட முடியாது எனக்கூறப்படுகிறது. 

தற்போது 33 வயதாகும் ரவீந்திர ஜடேஜா 7 மாதத்திற்கு பின் உடல்முன்னேற்றத்தை நிரூபித்த பிறகும் கூட அவரால் டெஸ்ட் கிரிக்கெட் போன்ற பெரிய போட்டிகளில் விளையாட அவரது கால்கள் ஒத்துழைக்குமா? என்ற கேள்விக்குறி காரணமாக  தற்போதே ஓய்வை அறிவிக்கும் திட்டத்திற்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவார் எனத்தெரிகிறது. 

இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 17 அரைச் சதங்களுடன் 2,195 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சிலும் 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளவுள்ள ரவீந்திர ஜடேஜா இந்திய அணி அடுத்தடுத்து மோதவிருக்கும் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களில் இருந்தும்  விலக வாய்ப்புள்ளது.