"Confirm".. ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்..? வெளியான முக்கிய தகவல்

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

"Confirm".. ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்..?  வெளியான முக்கிய தகவல்

ஐபிஎல் 15-வது தொடர் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்களுக்கான ஜெர்ஸி, அணி மாற்றங்கள் குறித்து அப்டேட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முன்னணி அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இன்னும் அணியின் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை.. இந்த காலதாமதத்திற்கு காரணம் இந்த மூன்று சீனியர் வீரர்கள் தான்.

அதாவது விராட் கோலிக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான லிஸ்டில் இருந்தனர். இதில் இருந்து அனுபமிக்க ஒருவரை கேப்டனாக எடுக்க தான் நீண்ட ஆலசோனை நடந்து வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்., இந்த மூவரில் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச கேப்டன் பதவியில் டுபிளெசிஸ் உள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் நீண்ட அனுபவம் உள்ளது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.