ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : மும்பையை வீழ்த்திய கேரளா அணி..!

3 கோல்கள் அடித்து கேரளா வீரர்கள் அசத்தல்..!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : மும்பையை வீழ்த்திய கேரளா அணி..!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி, கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில், 35-வது லீக் ஆட்டத்தில், மும்பை மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் சஹல் சமத் 27-வது நிமிடத்திலும், அல்வரோ 47-வது நிமிடத்திலும், ஜார்ஜ் பெரேயா 51-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆனால் மும்பை அணி வீரர்களால் எவ்வளவு முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, 3-0  என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.