ஐபிஎல் இறுதி போட்டி மழையால் ரத்து!

ஐபிஎல் இறுதி போட்டி மழையால் ரத்து!

16 வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் தொடர்மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது.  சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. இப்போட்டி நேற்று மாலை மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கப்பட இருந்தது. ஆனால், அப்போது மழை பெய்த காரணத்தால் போட்டி 9.30 மணிக்கு தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் மழை பெய்ததால் போட்டி திரும்பவும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 11 மணிக்குள் மழை நின்றால் போட்டி நடைபெறும் என்றும் இல்லையெனில் மறுநாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து நீடித்த கனமழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அதே மைதானத்தில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்றைய போட்டிக்கான டிக்கட்டுகளே இன்றைய போட்டிக்கும் செல்லும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேரில் டிக்கெட் வாங்கியவர்கள் அதனை தவறாமல் எடுத்து வருமாறும், ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!