ஐ.பி.எல் 2021: இன்று சென்னை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.பி.எல் 2021: இன்று சென்னை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள், இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு, இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். எனவே, இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.