சூடுபிடிக்கும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்..!

சென்னை-ஏ.டி.கே. மோகன் பகான் அணிகளுக்கான போட்டி டிராவில் முடிந்தது..!

சூடுபிடிக்கும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்..!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், சென்னை மற்றும் ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம், டிராவில் முடிந்தது. கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் யின்லிஸ்டன் கோலாகோ  ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியின் விடிமிர் கோமன், 45-வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால்  ஆட்டம் டிராவில் முடிந்தது.