3-வது டெஸ்ட் கிரிக்கெட்... முதல் இன்னிங்சை வலுவாக அமைத்த இங்கிலாந்து...

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

3-வது டெஸ்ட் கிரிக்கெட்... முதல் இன்னிங்சை வலுவாக அமைத்த இங்கிலாந்து...

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரின் ஐந்தாவது பந்தைச் சந்தித்த கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் சதமடித்த கே.எல். ராகுல் இம்முறை டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி,  7 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதன்பின்னர்  ரோகித் சர்மாவும் ரஹானேவும் சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினர்.  54 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்த ரஹானே பெவிலியன் திரும்பினார்.  இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 40 புள்ளி 4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி  42 ரன்கள் முன்னிலையில் உள்ளது.  ஹசீப் ஹமீத் 130 பந்துகளில் 60 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 125 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.