20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி...

இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி...

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்ற 29-வது போட்டியில், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஜாஸ் பட்லரின் அதிரடி சதம் மற்றும் கேப்டன் மோர்கனின் பொறுப்பான ஆட்டத்தால் 163 ரன்களை எடுத்தது. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான நிஷாங்கா 1 ரன்னிலும், குசல் பெரெரா 7 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு விளையாடினாலும், அவர்களால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இலங்கை அணியில் யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.