தோனியுடன் வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா..? மனம் திறந்த சாக்‌ஷி தோனி!!

தோனியுடன் வாழ்வது எவ்வளவு கடினம் என்று அவரது மனைவி சாக்‌ஷி தோனி மனம் திறந்துள்ளார்.

தோனியுடன் வாழ்வது எவ்வளவு கடினம்  தெரியுமா..?  மனம் திறந்த சாக்‌ஷி தோனி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி மற்றும் சாக்‌ஷி கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

12 வருடங்களாக ரசிகர்களின் விருப்பமான கிரிக்கெட் ஜோடியாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது தங்களது திருமண வாழ்க்கை பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில், தற்போதும் இவர்கள் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மகளிர் தினத்தையொட்டி சிஎஸ்கே வீரர்களின் மனைவிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் பேசிய தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி, அலுவலகத்திற்கு செல்பவரை திருமணம் செய்தாலே பல விஷயங்களை மாற்றி கொள்ளவேண்டும்.. அதேவே ஒரு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டால் பல விஷயங்களை பழகி கொள்ள வேண்டுமென கூறினார்.. கேமரா முன்னாள் நாங்கள் எப்படி இருப்பமோ அது போன்றே நிஜ வாழக்கையில் இருக்க மாட்டோம்.

முக்கியமாக பொதுவெளியில் எங்களை பற்றி பல கருத்துக்கள் பரவும்.. நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றால் கூட தவறான கருத்துக்கள் பரவும். இதெற்கெல்லாம் எங்களை தயார் செய்து கொண்டு தான், நாங்கள் இப்போது சகஜமாக இருக்கிறோம். ஆனாலும், எங்கள் கணவர்களால் நான் மிகவும் பெருமைக் கொள்கிறோம் என சாக்‌ஷி தோனி தெரிவித்தார்.