இந்திய கிரிக்கெட் அணி ஆலோசகராக தோனி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது: விராட் கோலி...

இந்திய கிரிக்கெட் அணி ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆலோசகராக தோனி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது: விராட் கோலி...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இன்று தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்றும், அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.