8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.  

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஐதராபாத் அணி, சிறப்பான தொடக்கம் தர தவறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் ஐதராபாத் அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரத்வி ஷா 11 ரன்னில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷ்ரேயஸ் அய்யருடன், கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் டெல்லி அணி 17 புள்ளி 5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.