ஐ.பி.எல் 2021… 7 விக்கெட் எடுத்து போராடி தோற்ற சென்னை அணி..  

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.  

ஐ.பி.எல் 2021… 7 விக்கெட் எடுத்து போராடி தோற்ற சென்னை அணி..   

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், தொடக்க வீரர்களாக ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். வழக்கமாக சிறப்பான தொடக்கம் கொடுக்கும் இந்த ஜோடி, நேற்றைய ஆட்டத்தில் ஏமாற்றியது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து அம்பத்தி ராயுடு மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் நிலைத்து ஆடினர். மிக சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு, அரை சதத்தை பதிவு செய்தார். இறுதி ஓவரில் டோனி விக்கெட்டை பறிகொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.

137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் தவிர, மற்ற வீரர்கள் விரைவில் அவுட் ஆகினர். தவான் 39 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் அணியை வெற்றி பெற வைக்க, ஹெட்மயர் போராடினார். 19 புள்ளி 4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற டெல்லி அணி, 7 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.