ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி…  

ராஜஸ்தான் அணிக்கு எதிராக மேக்ஸ்வெல், பரத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி…   

ராஜஸ்தான் அணிக்கு எதிராக மேக்ஸ்வெல், பரத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம், துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர்கள் எவின் லீவிஸ், ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர, எப்படியும் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி 25 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக விளையாடியது. ஸ்ரீகர் பரத் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 30 பந்துகளில் அரைசதம் அடித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 17 புள்ளி 1 ஓவரிலேயே வெற்றி இலக்கை தாண்டிய பெங்களூர் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.