"டேவிட் வார்னர் என்ட்ரி".. சூடு பிடிக்க போகும் ஐபிஎல்... இனி தொடக்கம் வேற லெவல்ல இருக்கும் போல!!

"டேவிட் வார்னர் என்ட்ரி".. சூடு பிடிக்க போகும் ஐபிஎல்... இனி தொடக்கம் வேற லெவல்ல இருக்கும் போல!!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட வீரர்கள்.. ஐபிஎல் தொடரில் தங்களது அணிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிரடி தொடக்க வீரர் ஒருவர் முக்கிய அணியில் இணைந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு அவர்களின் ரசிகர்கள் "இனிமேல் தான் ஆட்டம் இருக்கு" என கூறிவருகின்றனர்.

ஐபிஎல் 15 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன.

இதில் சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை போன்ற அணிகள் தோற்று, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற அணிகள் வெற்றி பெற்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இதில் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல், ஜானி பேர்ஸ்டோ, மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். இதில் ஏற்கனவே க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அவர்களின் அணியில் இணைந்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பாக்கப்பட்ட டேவிட் வார்னர் டெல்லி அணியுடன் இணைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வார்னர் மும்பை வந்தடைந்தார். தற்போது 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவர் பிளேயிங் 11 இல் இடம்பெறுவார். வருகிற 7ஆம் தேதி சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பப்டுகிறது.