டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தும் இந்திய வீரர்கள்: துப்பாக்கி சுடுதலில் அவனி 2வது பதக்கம் வென்று அசத்தல்...

டோக்யோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2-வது பதக்கம் வென்றுள்ளார்..  

டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தும் இந்திய வீரர்கள்: துப்பாக்கி சுடுதலில் அவனி 2வது பதக்கம் வென்று அசத்தல்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாரலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டியில் 162 நாடுகளில் இருந்து சுமார் 4000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற பாராலிம்பிக் 50 மீ துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 50 மீ ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்ததால் இந்திய வீராங்கணைஅவனி லெகாராவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.இதுவரை டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. பாராலிம்பிக் 10 மீ துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.