தமிழகம் திரும்பிய தடகள வீரர்கள்... விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு...

கென்யா நாட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தமிழகம் திரும்பிய தடகள வீரர்கள்... விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு...

கென்யா நாட்டில் இருபது வயது உட்பட்டோர்களுகான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.

இந்தியாவிலிருந்து 35 பேர் பங்குபெற்றனர். இதில் இந்தியா சார்பாக இரண்டு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

இதில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத்(18),விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன்(18) இருவரும் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து டெல்லியில் மத்திய விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுள்ளனர். அதை தொடர்ந்து சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு வீரர்கள்  கூறுகையில்:-

கென்யாவில் நடைபெற்ற 20  வயதுக்குட்பட்ட உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது பெற்றோர்களின் ஒத்துழைப்பு காரணமாகவே எங்களால் வெற்றிபெற முடிந்தது. மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

டெல்லியில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அவர்களை சந்தித்து பேசினோம் அவர் இந்தியாவில் விளையாட்டு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது தொடர்ந்து வீரர்கள் சிறப்பாக பயிற்சிகள் எடுத்து வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.

தமிழக அரசும் எங்களுக்கு உதவிகளை செய்தனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொகிறோம்.

இதையடுத்து பயிற்சியாளர் புகழேந்தி கூறுகையில்:-
வெண்கல பதக்கம் வென்ற இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் குடும்பத்தாரின் ஒத்துழைப்பாலும், அவர்களின் கடின முயற்சியாலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தில் முதல்முறையாக வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். இது மட்டுமில்லாமல் இனி வரும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை வாங்குவார்கள்.

மேலும் தமிழக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்தால் இன்னும் அவர்கள் திறமையை வெளிப்படுத்த ஊக்கமாக இருக்கும்.

மேலும் சென்னையில் தடகள விளையாட்டு வீரர்களுக்கு மைதானங்கள் தயார் செய்து தர வேண்டும். மைதானங்கள் குறைவாக உள்ளதால் வீரர்கள் வெகு தூரம் சென்று பயிற்சி எடுக்கும் நிலை உள்ளது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.