என்னை துரத்தியதால் தான் இந்தியாவில் கொரோனா வந்தது: எனது காலடி பட்டால் கொரோனா நாட்டை விட்டு போகும் ஜோக் அடிக்கும் நித்தியானந்தா

தன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் என கூறியுள்ள நித்தியானந்தா கைலாசா நாட்டின் மீது பயோவார் மூலம் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சிப்பதாக குமுறுகிறார்.

என்னை துரத்தியதால் தான் இந்தியாவில் கொரோனா வந்தது: எனது காலடி பட்டால் கொரோனா நாட்டை விட்டு போகும் ஜோக் அடிக்கும் நித்தியானந்தா

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் வாங்கிய தனித்தீவில் ஒரு நாட்டை உருவாக்கிவிட்டதாக சொல்லிக்கொள்கிறார். அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்தாக நித்யானந்தாவே கூறியிருந்தார்.

கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் கைலாசா நாட்டை நித்யானந்தா வாங்கியுள்ளராக அல்லது இந்தியாவிலேயே இருந்து ப்ளூ ஸ்கிரினில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் அடிக்கடி யூடியூபில் நித்யானந்தா வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். இந்த சூழலில் நித்யானந்தா தனது நாட்டில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சி செய்வதாகவும், நாங்கள் கேட்காத விதைகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளதாகவும், இது ஒரு பயோ வார் என்று கூறியுள்ளார்.

தன்னை பல பேர் பல்வேறு வகையில் தாக்கிவிட்டதால் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாக அந்த பதிவில் குறிப்பிட்ட நித்யானந்தா, விதைகளை அனுப்பி பயோவார் நடத்த சதி நடப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தான் இந்தியாவில் தான் காலடி பட்டால்தான் கொரோனா நாட்டை விட்டு போகும் என்றும் கொரோனா எனும் கிருமி நாட்டிற்குள் நுழைய தன்னை ஊரை விட்டு விரட்டியதே காரணம் என நிந்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.