12 -14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது - மத்திய அரசு!!

12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

12 -14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது - மத்திய அரசு!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த  கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். அவர் கூறுகையில், “12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என்றும். அதுசார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, இதுகுறிட்த விளக்கத்தை  சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ளது.

அதில், “ 12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.