2 படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..12 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..12 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்  மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை - இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 12 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது, மீனவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.