இந்தியாவில் 44 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைந்த கொரோனா தொற்று...

இந்தியாவில்  44 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைந்த கொரோனா தொற்று...

இந்தியாவில், 44 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஒருநாள் தினசரி பாதிப்பு 1 லட்சத்து 86 ஆயிரமாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 457 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரேநாளில் 3 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்திருப்பதால், மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 லட்சத்து 43 ஆயிரத்து 152 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  நேற்று வரை நாடு முழுவதும் 20 கோடியே 57 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.