வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டை, புலிப்பல், நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்...தப்பியோடியவரை வலைவீசி தேடி வரும் வனத்துறை

தாளவாடி அருகே  வீட்டில் பதுக்கி வைக்கபட்டிருந்த சந்தனக்கட்டை, புலிப்பல், நாட்டுத்துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டை, புலிப்பல், நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்...தப்பியோடியவரை வலைவீசி தேடி வரும் வனத்துறை

தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள  சாம்ராஜ்நகர் மாவட்டம்  பூதிப்படுகை கிராமத்தில் உள்ள வீட்டில் புலிப்பல், யானைபற்கள், யானை தந்தங்கள், மான் கொம்புகள், சந்தனகட்டைகள், நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பூதிப்படுகை  கிராமத்தில் சோதனை செய்தனர்.

அப்போது ரங்கசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தபோது  அவரது வீட்டில் புலிப்பல், யானை பற்கள், யானைத் தந்தங்கள், மான் கொம்புகள், வெடிமருந்துகள், சந்தனக்கட்டைகள், நாட்டு துப்பாக்கிகள், அரிவாள்,வெடி மருந்துகள், கஞ்சா இலைகள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

இவை அனைத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர்,  தப்பியோடிய ரங்கசாமி என்பவரை  வலைவீசி தேடி வருகின்றனர்.