இருவிதமான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் ஆபத்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இருவிதமான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் ஆபத்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி முதலில் செலுத்திய நிறுவனத்தின் ஊசியையே 2-வது முறையும் செலுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும். ஆனால் தற்போது 2 தவணைகளுல் 2 விதமான நிறுவனங்களின் தடுப்பூசி களை சிலர் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்  கொரோனா தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது என்பது முறையானதல்ல. என்றும் இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கான சோதனை உரிய தரவுகளுடன் கிடைத்த பின்னரே இதுபோன்று 2 தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கப்படும் என்றும், தற்போதுள்ள சூழ்நிலையில் 2 தடுப்பூசிகளை பயன்படுத்த சிபாரிசு செய்வது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனாவுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்த தகுந்த ஆய்வு முடிவுகள் இல்லாத நிலையில், தடுப்பூசி மிச்சம் வைத்துள்ள பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொடுத்துதவ முன்வர வேண்டும் என்று  உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதனம் கூறியுள்ளார். தடுப்பூசி நிறுவனங்கள் ஐ.நாவின் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.