இந்தியாவில் கொரோனா பலியை விட சாலை விபத்தில் அதிக பேர் பலி...

இந்தியாவில் கொரோனா பலியை விட சாலை விபத்தில் அதிக பேர் பலி...

வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பதாகவும் இது கொரோனா மரணங்களை விட அதிகமென வேதனை தெரிவித்தார்.

சாலை விபத்து இறப்புக்களை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும் 2030ம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகளும் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது தொலைநோக்கு என பேசிய நிதின் கட்காரி, சாலை விபத்துக்களில் 60 சதவீத மரணங்களில் சிக்குபவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் என்றார்.

 மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பாதுகாப்புதான் இப்போதைய தேவை.இந்தியாவில் ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம். நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது என் தார்மீக பொறுப்பு. சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது இலக்குகளை அடையவும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என பேசினார்.