சீனாவில் ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய கனமழை...
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில், ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவாக கனமழை வெளுத்து வாங்குவதால், நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்கு வந்த போலீசாா் ஆங்காங்கே செல்போன் பாா்த்தபடி அமா்ந்திருந்ததால் பக்தா்கள் பெரும் அவதியடைந்தனா்.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழக மட்டுமல்லாது மாநிலங்களில் இருந்தும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள்.
இதில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் படிக்க | குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியீடு...
அதன்படி இந்தாண்டு சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு மாசி மாத கடைசி ஞாயிறான இன்று பூச்சொரித்தல் விழா இன்று தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து வாரமும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவார்கள்.
இந்த நிலையில் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் இருந்து கடைவீதி தேரோடும் வீதி கோவில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் உண்டு உள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட ஈடுபடுவார்கள்.
மேலும் படிக்க | புதன் ஸ்தலத்தில் தேர் திருவிழா... வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்...
அந்த வகையில் இன்று முதல் பூச்சொரித்தல் விழா சமயபுரம் மாரியம்மன் கோவில் சார்பில் கோவில் இணைய ஆணையர் கல்யாணி தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
முதல் வாரம் பூச்சொரித்தல் விழாவான இன்று பாதுகாப்புக்கு வந்த பெரும்பாலான போலீசார் தங்களது பணிகளை செய்யாமல் பல இடங்களில் கடைகளிலே செல்போனை பார்த்துக் கொண்டு ஹாயாக உட்கார்ந்து உள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.
மேலும் படிக்க | 3 கிராமங்களுக்கு நடைபெற்ற மீன்பிடி திருவிழா... ஏராளமானோர் பங்கேற்பு...
மேலும் தேரோடும் வீதி கடைவீதி பகுதியில் சாலைகளின் நடுவே தள்ளுவண்டி கடைகளை வைத்தும், 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்திக் ஆக்கிரமித்ததால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
வருடம் வருடம் நடைபெறும் இந்த முக்கிய விழாவிற்கு இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பாதுகாப்பு அளித்து, கோவில் நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க | கோவில்பட்டி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா...
நாகலாந்து, மேகாலயாவில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையும் படிக்க : ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?
தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தவரை 60 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிட்டுள்ளனர்.
அதேபோல் நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் தலைமையில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தொடங்கியுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : கட்சி அலுவலகத்தில ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை...!
இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த காங்கிரஸ் மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் மட்டுமின்றி கட்சியின் உயர்மட்டக் குழுத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் பரவிய நிலையில், மாநாட்டில் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக முடிவெடுக்கும் வகையில் இவர்கள் 3 பேரும் இதில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போரிடும் வகையில் வங்கிகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவது அவசியம் என்று ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் முதல் ஜி20 கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. பெங்களூருவில் நடைபெறும் இந்த மாநாட்டில் சக்திதாஸ் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : பணிந்து போக தேவையில்லை; துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா!
இந்நிகழ்வில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்ததாகவும், பல நாடுகளில் நிதி நம்பகத்தன்மை, அதிகப்படியான கடனால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உலகப் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் இக்கூட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வாழ்வின் பல்வேறு படிநிலைகளை எளிமையாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆண்டின் முதல் செயற்கைக்கோளான SSLV D2 ராக்கெட்டை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது.
புவிநோக்கு செயற்கைக்கோள், ஜானுஸ்-1, ஆசாதிசாட்-2 ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் SSLV D2 ராக்கெட் அனுப்பும் பணி முன்னெடுக்கப்பட்டது. அலைக்கற்றை கண்காணிப்பு அமைப்பு, அதிநவீன மைக்ரோவேவ் சவுண்டருடன் புவிநோக்கு செயற்கைக்கோளும், மென்பொருள் இயக்க பயன்பாட்டிற்காக ஜானுஸ்-1 செயற்கைக்கோளும் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து 3 செயற்கைக்கோள்களுடன் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, SSLV D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க : இனி ஃபுட்போர்ட் அடிக்கும் மாணவர்கள் மீது புகார்... போக்குவரத்துத்துறையின் அதிரடி அறிவிப்பு...!
ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்ததால் விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. தொடர்ந்து இரு சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்ட SSLV D1 ராக்கெட், தோல்வியில் முடிந்த நிலையில் இன்று D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..