ஹெனானில் கடந்த வாரம் முதல், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து ஹெனான் மாகாணம் கடல் போல் காட்சி அளிக்கிறது. சாலை மற்றும் வீதிகளில் ஆறு போல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சாலைகள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், மாகாணத்தின் தலைநகர் ஷெங்க்சோ உள்ளிட்ட 12க்கு மேற்பட்ட நகரங்கள் தீவு போல் காட்சியளிக்கின்றன.