சீனாவில் ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய கனமழை...
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில், ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவாக கனமழை வெளுத்து வாங்குவதால், நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

காவிரி நீருக்காக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவிரி நீரை ஏன் தடுக்க வேண்டும் எனவும், அனைவருக்கும் இந்த உலகம் சமம் தான் எனவும் குறிப்பிட்டு, போராட்ட காலத்தில், தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார் கன்னட நடிகர் சிவராஜ் குமார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாக நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கன்னட நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில், முன்னணி கன்னட நடிகர்களான தர்ஷன் (டி பாஸ்) மற்றும் சிவராஜ் குமார் போன்றோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர்.
அப்பொழுது பேசிய சிவராஜ்குமார்," நமது அரசோ, அல்லது தமிழ் நாடு அரசோ, அல்லது ஆந்திரா அரசோ, ஒன்றாக சேர்ந்து பேசி ஒரு தீர்வுக்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட இரு மாநில அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் மற்றும் நீதிமன்றமும் ஒன்றாக சேர்ந்து ஆலோசித்து தீர்வு காண வேண்டும். அதை விட்டுவிட்டு இது போன்று போராட்டங்களில் ஈடுபடுவது தவறு. போராட்டம் என்ற பெயரில் பேருந்துகளை அடித்து நொறுக்கினால், பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திடுமா? பேருந்துகளை அடித்து நொறுக்கினால் அது போராட்டமாகிடுமா? இதெல்லாம் போராட்டமில்லை, வன்முறை" என பேசியுள்ளார்.
மேலும், "இந்த உலகம் அனைவருக்குமானது. தமிழ்நாடு விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் மற்றும் ஆந்திர விவசாயிகள் வேறு வேறு அல்ல. அனைவரும் சமம் தான். காவிரி நீரை ஏன் தடுக்க வேண்டும்" என பேசியுள்ளார்.
மேலும் "தமிழ் நடிகர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பாதியிலேயே வெளியேற்றியது மிகப்பெரிய தவறு. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என, பெங்களூரில் நடந்த சித்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் சித்தார்த்தை வெளியேற்றியது குறித்து பேசி மன்னிப்பும் கோரியுள்ளார்.
மேலும், வரும் பிரச்சனைகளை அனைவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்பதே மனிதத்தன்மை. என்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மனிதர்களே இல்லை எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மொழி மற்றும் சட்டத்தின் எளிமை ஆகியவை நீதி வழங்கும் முறையின் மறுபகுதி என்றும், அதைப் பற்றி நாம் இன்றளவும் அதிகம் பேசவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள அறிவியல் மையத்தில் இந்திய வழக்கறிஞர்கள் கழகத்தின் சார்பில் நடைபெறும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாடு பல்வேறு வரலாற்று அடிகளை எடுத்து வைக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா, இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு புதிய திசை மற்றும் சக்தியை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க : ’த்ரீ எக்ஸ் த்ரீ’ கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேற்றம்!
சுதந்திர போராட்டத்தின் போது, பல வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை விட்டு விடுதலை இயக்கத்தில் இணைந்து போராடியதை நினைவு கூர்ந்த பிரதமர், பாரத நாட்டின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கைக்கு ரதத்தின் சுதந்திரமான நீதித்துறை முக்கிய பங்காற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
எந்த ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் சட்டத்தின் பங்கு முக்கியம் என்று கூறிய பிரதமர், நீதித் துறை மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவின் சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களாக இருந்து வருவதாக கூறினார்.
சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை நாம் எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
இதையும் படிக்க : "தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நீட் தேர்வு முறை" டாக்டர் எழிலன் குற்றச்சாட்டு!
இவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில், பல்வேறு தரப்பினர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் என்ன என்பது பற்றி சிபிஐ விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையில், சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து, தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சனாதன சர்ச்சை விவகாரத்தில் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவில் புது வரலாறு படைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லி பாஜக தலைமையகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்விடம் சென்ற பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையும் படிக்க : சாலையில் கொளுந்து விட்டு எரிந்த ஆம்னி பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிய அனைத்து எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். இடஒதுக்கீட்டில் அதிருப்தி அடையும் அளவுக்கு சில அரசியல்கட்சிகள் செயல்பட்டதாகவும், பல தடைகள் இருந்தபோதும் வெளிப்படையான முயற்சிகளால் இடர்பாடுகளை உடைத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவில் புது வரலாறு படைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.
கனடா நாட்டவர்கள் இந்தியா வருவதற்கான விசாவை காலவரையன்றி மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். தொடர்ந்து இந்தியத் தூதரை கனடா வெளியேற்றியதை அடுத்து கனடா தூதரையும் டெல்லியில் இருந்து இந்தியா வெளியேற்றியது. இதனால் இருநாட்டு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு குழப்பங்கள் நீடித்து வந்தது.
இதையும் படிக்க : தூத்துக்குடி அனல் மின்நிலையம்: 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை!
தொடர்ந்து கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்களும் மாணவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் 2017ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிய மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த ஊரான பஞ்சாப்பின் மோகாவில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் கனடா நாட்டவர்கள் இந்தியா வருவதற்கான விசாவை காலவரையன்றி மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.