ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? நாட்டு மக்களுக்கு தற்போது வரை தெரியவில்லை: மத்திய அமைச்சர் விமர்சனம்...

ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது நாட்டு மக்களுக்கு தற்போது வரை தெரியவில்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா?  நாட்டு மக்களுக்கு தற்போது வரை தெரியவில்லை: மத்திய அமைச்சர் விமர்சனம்...

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கூடுதல் சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த 5 தடுப்பூசி மையங்களை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பின் செய்தியாளர்களை சந்தித்து பீகாரில் கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ராகுல்காந்தி தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்பது மக்களுக்கு தெரியாது என கூறிய அவர், ராகுல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனில் அவர் விரைந்து செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்வதாக கூறினார்.