காங்கிரஸ் கட்சி கோமாவில் இருந்து வெளியே வரவில்லை: பிரதமர் மோடி

பல சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்ற பிறகும் கூட, காங்கிரஸ் கட்சி கோமாவில் இருந்து வெளியே வரவில்லை என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி கோமாவில் இருந்து வெளியே வரவில்லை: பிரதமர் மோடி
பாஜக எம். பி.க்களுடனான வாராந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சிக்கு வந்ததை காங்கிரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், 60 ஆண்டு காலமாக நாட்டை ஆண்ட அந்த உணர்வில் இருந்து இன்னும் மீளாத காரணத்தால் தான், மக்கள் பணியில் இருந்து அக்கட்சி தவறி விட்டதாகவும் சாடினார். அசாம், மேற்குவங்கம், கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி அடைந்த பிறகும் கூட, அக்கட்சியால் கோமாவில் இருந்து வெளியே வரமுடியவில்லை என்று கூறினார். 
பொறுப்பற்ற முறையில் காங்கிரஸ் கட்சி நடந்து கொள்வதாகக் கூறிய மோடி, அரசின் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று எம். பி.க்களை கேட்டுக் கொண்டார். நாட்டில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடே இல்லாத நிலையில், அது தொடர்பாக எதிர்மறையான கருத்துகளை காங்கிரஸ் பரப் பி வருவதாகவும் மோடி குறிப் பிட்டார். கொரோனா வைரஸ் தொற்று என்பது மனித சமுதாயம் சார்ந்த பிரச்சனை என்றும், அரசியல் ரீதியிலானது இல்லை என்றும் பிரதமர் விளக்கம் அளித்தார்.