நவம்பர் 3-இல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்...!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பது குறித்து நேற்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காவிரியில் இருந்து  தமிழ்நாட்டிற்கு  இரண்டாயிரத்து 600 கன அடி நீர் திறப்பதற்கான பரிந்துரை வழங்கப்பட்டது. 

இதையும் படிக்க  : ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு...!

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நவம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாகவும், அதில் தழிழ்நாட்டிற்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.