பீகார் மாநில அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு - இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு!

பீகார் மாநில அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு - இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு!

பீகாரின் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக பீகாரில் சாதிவாரியாக கணக்கெடுக்கும் பணி கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. இதற்கான முதற்கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், டிஜிட்டல் முறையில் மொபைல் அப்ளிகேஷன் மூலம் 2ம் கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. 

இதையும் படிக்க : திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கில்...வெற்றி பெற்றார் கனிமொழி!

இந்நிலையில் பீகார் மாநில அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ’சமத்துவத்திற்கான இளைஞர்கள்’ என்ற அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மனுவை 3 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்குமாறு பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. 

தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், ஆனால், ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டவிரோதமாக கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தி வருவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பீகாரின் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.