5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம்...பங்கேற்கும் முன்னணி நிறுவனங்கள்...!

5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலத்தில் பங்கேற்க, பணக்காரர்களான கவுதம் அதானி தலைமையிலான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தொலைத்தொடர்பு துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம்...பங்கேற்கும் முன்னணி நிறுவனங்கள்...!

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், வருகிற ஜூலை 26 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கலந்துகொள்ள உள்ளது. மேலும், ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும்இந்த ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மத்திய தொலைதொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
பல்வேறு குறைந்த, நடுத்தர மற்றும் அதிக அளவிலான அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம், ஏலம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து, "இந்த 2022 ம் ஆண்டுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 3300 MHz மற்றும் 26 GHz  அலைவரிசைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்" என தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற ஜூலை 19 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம், 72,097.85 MHz ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு வருகிறது. இதன் மதிப்பு 4.3 லட்சம் ரூபாயாகும்.

 

அதானி குழுமம் சனிக்கிழமையன்று (09.07.2022) ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்கான போட்டியில் இருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இது விமான நிலையங்கள் முதல் தரவு மையங்கள் வரை அதன் வணிகங்களை ஆதரிக்க ஒரு தனியார் நெட்வொர்க்கை உருவாக்கப் பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தது. உலகளவில், 700MHz (கவரேஜ்), 3.5GHz (5G கவரேஜ் மற்றும் திறன்) மற்றும் 26GHz (திறன் மற்றும் குறைந்த தாமதம்) ஆகிய மூன்று பேண்டுகளில் 5G சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.