24 நாட்டு விமானங்களுக்கு தடை நீட்டிப்பு... ஏமன் அரசு அறிவிப்பு...

இந்தியா உட்பட 24 நாட்டு விமானங்களுக்கு தடை நீட்டிப்பு

24 நாட்டு விமானங்களுக்கு தடை நீட்டிப்பு... ஏமன் அரசு அறிவிப்பு...
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஏமன் அரசு விதித்திருந்த தடையை அந்நாட்டு அரசு மேலும் நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி முதல் ஏமன் நாட்டில், சர்வதேச விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்தியா, பிரிட்டன், ஈரான், லெபனான் உட்பட 24 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடையை நீட்டிப்பதாக ஏமன் அரசு அறிவித்துள்ளது.