போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை அன்ன்யா பான்டே ஆஜர்.!!
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடிகை அனன்யா பாண்டே ஆஜராகி விளக்கம் அளித்தார்.
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடிகை அனன்யா பாண்டே ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தடை செய்யப்பட்ட போதை பொருள் விருநு்து வைத்த வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர்.
கப்பலில் கைது செய்யப்பட்ட 20 பேரில் சிலருடன் நடிகை அனன்யா வாட்ஸப் மூலம் போதை பொருட்கள் குறித்து பேசியதை அதிகாரிகள் கண்டு பிடித்ததன் அடிப்படையில் சம்மன் அனுப்பட்டது.
இந்நிலையில் விசாரணைக்காக தன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட அனன்யா மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலக அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.