எங்கள் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை…

எங்கள் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை…

தங்கள் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டதட்ட 6 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்க விவசாயிகள், மத்திய அரசு தங்கள் சோதித்து பார்க்க வேண்டாம் எனவும், தங்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.