நடுக்கடலில் கவிழ்ந்த படகு...மீனவர்களின் நிலை என்ன?

நடுக்கடலில் கவிழ்ந்த படகு...மீனவர்களின் நிலை என்ன?

கேரளாவில் 23 மீனவர்கள் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பெருமாத்துறை அருகே நேற்று மாலை அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் சூறைக்காற்றும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

இதில் படகு சிக்கித் தள்ளாடியது. காற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 23 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றிய தகவல் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதற்குள் கடலில் விழுந்த ஷா நவாஸ், நிஜாம் என்ற 2 மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். 18 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 3 பேரைக் காணவில்லை. அவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் தேடி வருகிறார்கள். மேலும் ஹெலிகாப்டர் மூலமும் தேடும் பணி நடந்து வருகிறது.