புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல்  எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது  புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  தொலைதூரத்தில் புயல் உருவாகி இருப்பதை மீனவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.