புதுச்சேரி அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம்!

சமூக நீதி அமைப்புகள் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம்!
Published on
Updated on
1 min read

கருத்துரிமையை நசுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் மீது வழக்கு தொடுக்கும் புதுச்சேரி அரசை கண்டித்து சமூக நீதி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கருத்துரிமையை நசுக்கும்வகையில் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையினரை கண்டித்தும், தொடர்ந்து கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை ஏவி விடும் புதுச்சேரி அரசை கண்டித்து சமூக நீதிக்கூட்டியக்கம் சார்பில் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று புதுச்சேரி அரசைக்கு எதிரான முழக்கஙகளை எழுப்பினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com