பட்டாசு சத்தத்துக்கு பயந்து மணமகனுடன் ஓட்டம் பிடித்த குதிரை!

ராஜஸ்தானில் பட்டாசு சத்தத்தை கேட்டு பயந்து, குதிரை ஒன்று மணமகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

பட்டாசு சத்தத்துக்கு பயந்து மணமகனுடன் ஓட்டம் பிடித்த குதிரை!

ராஜஸ்தானில் பட்டாசு சத்தத்தை கேட்டு பயந்து, குதிரை ஒன்று மணமகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

அஜ்மீரில் உள்ள ராம்புரா பகுதியில் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தில் மக்கள் திரண்டிருந்த நிலையில், மணமகன் குதிரையில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்.  அப்போது கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் சத்தத்தை கேட்டு மிரண்ட குதிரை மணமகனுடன் அந்த இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டம் பிடித்துள்ளது.

இதையடுத்து, ஊர்வலமாக காரில் சென்றோர், குதிரையை பின்தொடர்ந்து சென்று மணமகனை மீட்டுள்ளனர்.