சாலையில் நிலச்சரிவு - பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் நிலச்சரிவில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடிய  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலையில் நிலச்சரிவு - பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் நிலச்சரிவில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடிய  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அவ்வபோது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நைனிடால் என்னும் பகுதியில் 14 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுனர் சில அடி தொலைவில் பேருந்தை நிறுத்திவிட பயணிகள் அலறியடித்துக் கொண்டி பேருந்தை விட்டு வெளியேறி உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.