செப்டம்பர், அக்டோபரில் கொரோனாவின் 3ம் அலை தொடங்கும்.! - நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை.! 

செப்டம்பர், அக்டோபரில் கொரோனாவின் 3ம் அலை தொடங்கும்.! - நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை.! 

செப்டம்பர், அக்டோபரில் கொரோனா 3-வது அலை தொடங்கும் என்றும், முன்னேற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் விநியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் ஆகியவற்றால் கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டதாக கூறியுள்ளார்.  


இதனால் புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள நிதி ஆயோக் உறுப்பினர், இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் தெளிவாக கூறியிருந்ததாகவும், மேலும் இந்த அலை இளம் தலைமுறையினரை அதிக அளவில் பாதிக்கும் என எச்சரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என தெரிவதாகவும், அதனை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், நமது மருத்துவ கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.