ஆரம்பமே அமோகம்... முதல் நாளிலேயே அனைத்து பங்குகளையும் விற்ற  ஜொமாட்டோ...

பங்கு சந்தையில் முதன்முறையாக நேற்று பட்டியலிடப்பட்ட ஜொமோட்டோ நிறுவன பங்குகள் அனைத்தும் ஒரேநாளில் விற்று தீர்ந்துவிட்டன.

ஆரம்பமே அமோகம்... முதல் நாளிலேயே அனைத்து பங்குகளையும் விற்ற  ஜொமாட்டோ...

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களின் ஒன்றான ஜொமோட்டோ முதன்முறையாக நேற்று  பங்குச் சந்தையில் கால் பதித்தது. முதல்கட்டமாக 9 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்த ஜொமோட்டோ நிறுவனம் அவற்றை நேற்று படியலிட்டன.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ஜொமாட்டோ நிறுவனத்தில் பங்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 19 பங்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் அனைத்து பங்குகளுக்கு ஏலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரேநாளில் 40 சதவீதம் அளவுக்கு சந்தாதாரர்களை ஜொமோட்டோ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.