அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- மக்கள் பீதி!

இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 3 நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- மக்கள் பீதி!

இந்தியாவில் கடந்த மாதம் தென் மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நிலையில் தற்போது வட மாநிலங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடிய மழை நீரில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும்  அடித்து செல்லப்பட்டன.

குலு மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்ததில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அதிக மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.