ஷாருக்கான் யார்.....என்னை யாரும் அழைக்கவில்லை....

ஷாருக்கான் யார்.....என்னை யாரும் அழைக்கவில்லை....

ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

பதான் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு ஷாருக்கான் அவரை அழைத்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்துள்ளார்.  கவுகாத்தியில் உள்ள நரேங்கி ஹாலில் பதான் படத்தின் திரையிடலைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவும் அதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.  படத்தைத் திரையிடும்போது எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என வாக்களித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கௌகாத்தியில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அசாம் முதலமைச்சர் ஷாருக்கின் பதான் படத்தைப் பார்க்க மறுத்துவிட்டார்.   ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், ஷாருக்கான் யார்? அவரைப் பற்றியோ, படத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது எனவும் ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை, ஆனால் அவர் அழைத்தால், நான் பிரச்சினையை கவனிப்பேன்  எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஈரோடு தொகுதி....அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிப்பு....காங்கிரஸின் திடீர் மாற்றம்...