உள்ளாட்சி தேர்தலை நடத்த விடமாட்டோம்... பா.ஜ.க. மாநிலத்தலைவர் அறிவிப்பு...

மகாராஷ்டிராவில் ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினை தீர்க்கப்படும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த விடமாட்டோம் என பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த விடமாட்டோம்... பா.ஜ.க. மாநிலத்தலைவர் அறிவிப்பு...

மஹாராஷ்டிரா மாநிலத்தில், மராத்தா இட ஒதுக்கீடு, ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையால் உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததாக எதிர்க்கட்சியான பா.ஜ.க., கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மாநிலம் முழுவதும் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்,  ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினை தீர்க்கப்படும் வரை மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்த விடமாட்டோம் எனவும் திட்டவட்டமாக கூறினார்.